பெண் நோயாளியிடம் சில்மிஷம் செய்த டாக்டர் கைது
சென்னை:
சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற டாக்டரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை ஆலந்தூரை அடுத்துள்ள பெருத்தபாக்கத்தைச் சேர்ந்தவர் ஐசக். இவரது மனைவி ஜான்சிக்கு உடல் நிலை சரியில்லைஎன்பதால் வியாழக்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றார்.
அங்கு டாக்டர் முகம்மது பரூக் என்பவர் ஜான்சியை பரிசோதித்துப் பார்த்தார். பின்னர் குளுகோஸ் ஏற்ற வேண்டும், இரவுமருத்துவமனையில் தங்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து ஐசக் தனது மனைவியை மருத்துவமனையில் விட்டு விட்டுகாலையில் வருவதாக கூறி வீடு திரும்பினார்.
காலையில் அவர் மருத்துவமனைக்கு வந்தபோது, அவரது மனைவி ஜான்சி அழுத கண்களோடு காணப்பட்டார். பதறிப்போனஐசக் அவரிடம் விசாரித்தபோது, குளுகோஸ் ஏற்றுவதாக கூறிய டாக்டர் பரூக், இரவு முழுவதும் தன்னிடம் தவறாக நடக்கமுயன்றார் எனவும், மிகுந்த போராட்டத்திற்கிடையே என்னைக் காத்துக் கொண்டேன் என்றும் ஜான்சி கூறியுள்ளார்.
இதையடுத்து பரங்கிமலை போலீஸில் ஐசக் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விரைந்து வந்து டாக்டர் பரூக்கை கைதுசெய்து அழைத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications