மீண்டும் குருவாயூர் போகிறார் ஜெ.?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் சிறப்புப்பூஜை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வந்தார் ஜெயலலிதா.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜோதிடர் உண்ணி கிருஷ்ணனுடன் ஆலோசனை நடத்தினார். தேர்தலில் ஜெயலலிதா வெல்வதுநிச்சயம் என்று கூறிய உண்ணி கிருஷ்ணன், அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டால் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு யானைபரிசளித்து பூஜை செய்யுமாறு ஆலோசனை கூறியிருந்தார்.

அதன்படி முதல்வரானவுடன் கேரளா சென்று யானையை பரிசளித்தார் ஜெயலலிதா.

இந் நிலையில், முதல்வராக இருந்த ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து தனது பதவியை இழந்தார்.

இதையடுத்து மீண்டும் உண்ணி கிருஷ்ணனை ஜெயலலிதா அணுகியதாகத் தெரிகிறது. அவரது அறிவுரைப்படி மீண்டும் ஒருமுறை குருவாயூர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யுமாறும், அப்படிச் செய்தால் இழந்த பதவியை மீண்டும் பெற முடியும் என்றும்ஜெயலலிதாவுக்குத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து மீண்டும் குருவாயூர் கோவிலில் பூஜை செய்வதற்காக ரூ. 20,000 டெபாசிட் கட்டி ஜெயலலிதா முன் பதிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+