ரஷ்ய விமானத்தை ஏவுகணை தாக்கியது: அமெரிக்க செயற்கைகோள் படம்பிடித்தது
வாஷிங்டன்:
ரஷ்ய ஜெட் விமானம் வெடித்து சிதறியதற்கு உக்ரைன் நாட்டின் ஏவுகணைதாக்குதல்தான் காரணம் என்று அமெரிக்க உளவு செயற்கைகோள் கண்டுபிடித்துள்ளது.
ரஷ்ய விமானம் வெடித்து சிதறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் உக்ரைன்ஏவுகணையை விண்ணில் ஏவியதை இன்ஃப்ராரெட் சென்சார்கள் பொருத்தப்பட்டஅமெரிக்க உளவு செயற்கைகோள் படம் பிடித்தது என தி வாஷிங்டன் போஸ்ட்தெரிவிக்கிறது.
ரஷ்ய நாட்டின் டி.யூ-154 என்ற ஜெட் விமானம் நேற்று (வியாழக்கிழமை) இஸ்ரேல்தலைநகர் டெல்அவிவிலிருந்து சைபீரியா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்தவிமானத்தில் 64 பயணிகளும் 12 விமான பணியாளர்களும் இருந்தனர். பயணிகளில்பெரும்பாலானவர்கள் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள்.
அந்த விமானம் கருங்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது திடீரெனவெடித்துச் சிதறி கருங்கடலுக்குள் விழுந்தது.
இந்த விமானம் வெடித்துச் சிதறியதற்கு தீவிராவாதிகள் வைத்த வெடிகுண்டுகாரணமாக இருக்கக்கூடும். இல்லையென்றால் உக்ரைன் நாட்டு ஏவுகணைகள்நடத்திய தாக்குதல் காரணமாக இருக்கக்கூடும் என்று கூறப்பட்டது.
ஆனாலும் உக்ரைன் தங்கள் நாட்டு ஏவுகணைகள் ரஷ்ய விமானத்தை தாக்கவில்லை,அவை குறிப்பிட்ட இலக்கை சரியாக சென்று தாக்கிவிட்டன. ஏவுகணைகள்செலுத்தப்பட்ட பகுதிக்கு விமானம் வரவில்லை என்று அந்நாட்டு அதிகாரிகள்கூறினர்.
அமெரிக்க பாதுக்காப்புத்துறை அதிகாரிகள் கூறியதாக நியூயார்க் டைம்ஸ்பத்திரிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
உக்ரைனின் எஸ்-200 என்றழைக்கப்படும் எஸ்.ஏ. 12 ஏவுகணை தான் தாக்கவேண்டிய இலக்கை தாக்காமல் ரஷ்ய விமானத்தை மோதி தாக்கிவிட்டது. உக்ரைனின்தரையிலிருந்து விண்ணைத் தாக்கும் ஏவுகணைதான் ரஷ்ய விமானத்தை தாக்கியுள்ளதுஎன தெரிய வந்ததுள்ளது.