தனியார் நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு வேண்டும்: வீரமணி
சென்னை:
அரசு நிறுவனங்களில் உள்ளதைப் போல, தனியார் நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு முறையைப் பின்பற்ற அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தப்போவதாக திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்வீரமணி கூறினார்.
இதுகுறித்து சென்னையில் வீரமணி நிருபர்களிடம் மேலும் கூறுகையில்,
அரசு நிறுவனங்களில் பின்பற்றப்படுவதைப் போல, தனியார் றிநறுவனங்களிலும் இடஒதுக்கீடுபின்பற்றப்படவேண்டும். இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து நாளை நடைபெறும் இளைஞர் அணிமாநாட்டில் ஆலோசக்க இருக்கிறோம்.
மேலும் அடுத்த மாதம் டெல்லியில் இதுதொடர்பாக மாநாடு நடத்தவும், அதில் அனைத்துக்கட்சித் தலைவர்களும்கலந்துகொள்ளவும் ஏற்பாடுகள் செய்துவருகிறோம்.
இடஒதுக்கீட்டைைப் பின்பற்ற வேண்டியிருப்பதால், பல அரசு நிறுவனங்கள் கூட தனியார் மயமாக்கப்பட்டுவருகிறது. தாரளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் ஆகிய கொள்கைகளால், நாட்டின்பொருளாதாரமும், சமூக நீதியும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக சுப்ரீம் கோர்ட்டில் கிடப்பில் போடப்பட்டுள்ள, இடஒதுக்கீடு சம்பந்தமானவழக்கை விரைந்து நடத்த வலியுறுத்த வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக்கொண்டுள்ளோம்.
இவ்வாறு வீரமணி கூறினார்.












Click it and Unblock the Notifications