For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆப்கானிஸ்தானில் மிக பலத்த சேதம்: 25 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

லண்டன்:

அமெரிக்காவும், பிரிட்டனும் நடத்திய பயங்கர தாக்குதலால் ஆப்கானிஸ்தானுக்கு மிகமோசமான சேதம் ஏற்பட்டுள்ளது என பிரிட்டனின் வெளியுறவுத்துறை செயலாளர் ஜாக்ஸ்டிரா கூறியுள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் விமானப்படைவிமானங்கள் ஆப்கானிஸ்தானில் காபூல், கான்டஹார் மற்றும் ஜாலாதாபாத் மீது தாக்குதல்நடத்தின.

இந்த தாக்குதல் ஆப்கானிஸ்தானுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்றுபிரிட்டனின் வெளியுறவுத்துறை செயலாளர் ஜாக் ஸ்டிரா கூறியுள்ளார்.

இன்று ஐரோப்பிய ஐக்கிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக லக்செம்பர்க்குக்கு கிளம்பிச் செல்லும் முன் அவர் செய்தியாளர்களுக்குபேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அமெரிக்க, பிரிட்டன் விமானங்கள் நடத்திய தாக்குதல் எல்லாம் குறிவைத்த இலக்கைசரியாக சென்று தாக்கியுள்ளன. இதன் மூலம் ஆப்கானிஸ்தாக்கு பலக்த்த சேதம்ஏற்பட்டுள்ளது.

நான் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாள் கோஃபி அனானுடனும் பேசினேன்.அமெரிக்க, பிரிட்டன் படைகள் நடத்தும் தாகுத்தல் குறிபிட்ட சில இலக்குகள் மீதுதான்இருக்கும் என்று அவருக்கு உறுதியளித்தேன்.

ஞாயிற்றுக்கிழமை இரவு பல நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர்களுடன் பேசினேன்.அமெரிக்காவும், பிரிட்டனும் நடத்திய தாக்குதலுக்கு எல்லாருமே ஆதரவு தெரிவித்தனர்.

பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் போரில் பங்கேற்க விரும்தெரிவித்தன என்றார்.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கான தலிபான் தூதர் அப்துல் சலாம் ஜாகீப் திங்கள்கிழமைசெய்தியாளர்களிடம் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தான்மீது அமெரிக்காமிகப் பெரிய அளவில் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் 25 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X