இந்திய வான்வெளி பயன்படுத்தப்படவில்லை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்திய வான்வெளியை அமெரிக்க விமானங்கள் பயன்படுத்தவில்லை என இந்தியவெளியுறவுத்துறை இணையமைச்சர் ஒமர் அப்துல்லா கூறினார்.
நிருபர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறுகையில், தலிபான்கள் மீது தாக்குதல் நடத்த இந்தியாவின் விமானப் படைத் தளங்களைப்பயன்படுத்திக் கொள்ளவோ, இந்திய வான் வெளியைப் பயன்படுத்திக் கொள்ளவோ அமெரிக்கா முன் வந்தால் நாங்கள் மிகுந்தமகிழ்ச்சியடைவோம்.
ஆனால். இது போன்ற உதவி எதையும் அமெரிக்கா கோரவில்லை. இந்தத் தாக்குதலால் ஆப்கானிஸ்தானின் பொது மக்கள் யாரும்பாதிக்கப்படக் கூடாது. ஏற்கனவே, தலிபான்களின் ஆட்சியில் ஏற்கனவே அந்த மக்கள் நொந்துபோய், பசியும் பட்டினியுமாகவாழந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications