For Daily Alerts
Just In
ஊட்டி மலையில் லாரி உருண்டதில் 6 பேர் பலி
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மலைப் பாதையில் லாரி உருண்டு விழுந்ததில் 4 பெண்கள் உள்பட 6 பேர்உயிரிழந்தனர்.
கோத்தகிரியை நோக்கி அந்த லாரி சென்று கொண்டிருந்தது. லாரியில் கட்டுமானத் தொழிலில் வேலை பார்க்கும்மேஸ்திரிகள், சித்தாள்கள் ஆகியோர் இருந்தனர்.
லாரி கோத்தகிரியை நெருங்கியபோது எதிர்பாராத விதமாக மலைப் பாதையில் உருண்டு விழுந்தது.
இதில் 4 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்ற 2பேரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தனர்.
காயமடைந்த 11 பேர் கோத்தகிரி மற்றும் கோவை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Comments
Story first published: Wednesday, October 10, 2001, 5:30 [IST]