போர் எதிரொலி: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு தீவிரம்
சென்னை:
ஆப்கான் மீது அமெரிக்கா விமானத் தாக்குதல் நடத்திவருவதையடுத்து, தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள்தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தக் காரணமான சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடனை அமெரிக்காவிடம்ஒப்படைக்க ஆப்கானில் ஆளும் தலிபான்கள் மறுத்துவிட்டனர். இதனால் கடந்த 3-வது நாளாக ஆப்கான் மீதுஅமெரிக்கா விமானத் தாக்குதல் நடத்திவருகிறது.
இதையடுத்து இந்தியா முழுவதும் பாதுகாப்பைப் பலப்படுத்த டெல்லியில் மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றுமஉயர் போலீஸ் அதிகாரிகள் கூட்டம நடந்தது. இந்தக் கூட்டடத்தில் நாடுமுழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள்பலப்படுத்தப்படும் என்று முடிவுசெய்யப்பட்டது.
அதன்படி தமிழகத்தில் உள்ள அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளின் தூததரகங்களுக்கு சிறப்புப் பாதுகாப்புஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்தத் தூதரகங்களில் பணிபுரியும் அதிகாரிகளின் வீடுகளுக்கும்பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
மேலும் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம், கல்பாக்கம் அணுமின்நிலையம் போன்ற இடங்களிலுங்ம பாதுகாப்புஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கடலோரக் காவல்படையும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி விமான நிலையங்களிலும் தீவிர பாதுகாப்பில் போலீசார்ஈடுபட்டுள்ளனர்.
மேலும், தமிழகத்திலுள்ள அனைத்து உயரமான கட்டடங்களிலும் கோவில்களிலும் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications