இலங்கை: 9 ஆளும் கட்சி எம்.பிக்கள் விலகல்
கொழும்பு:
இலங்கையில் ஆளும் மக்கள் கூட்டணி கட்சியிலிருந்து 9 எம்.பிக்கள் விலகி எதிர்கட்சியில் சேர்ந்துவிட்டனர்.
இந்நிலையில் நேற்று (செவ்வாய்கிழமை) ஒரு எம்.பி. விலகி எதிர்கட்சியில் சேர்ந்ததார். இதைத்தொடர்ந்து இன்று 8பேர் முன்னாள் அமைச்சர் திசநாயகே தலைமையில் கட்சியிலிருந்து விலகி எதிர் அணியில் இணைந்துள்ளனர்.
இதனால் பதாராளுமன்றத்தில் 119 ஆக இருந்த மக்கள் கூட்டணியின் பலம், தற்போது 110 ஆகக் குறைந்துள்ளது.பாராளுமன்றத்தின் மொத்த உறுப்பிணர்களின் எண்ணிக்கை 225 என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களைத்தொடர்ந்து மேலும் பல ஆளுங்கட்சி எம்.பிக்கள் விலகுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
மேலும் 6 எம்.பிக்களைக் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், இன்னும் தனது நிலையை அறிவிக்கவில்லை.இந்தக் கட்சி கடந்த 3 மாதங்களுக்கு முன்னாள் ஆளுங்கட்சிக் கூட்டணியில் இருந்து விலகியது. எனவே இந்தக்கட்சியும் ஆளுங்கட்சிக்கு ஆதரவு அளிப்பது சந்தேகம் என்றும் கூறப்படுகிறது.
இவர்கள் அனைவரும் ஆளுங்கட்சியிலிருந்து விலகுவதற்குக் காரணம், ஜனதா விமுக்தி பெரமுணாவு கட்சியுடன்(ஜே.வி.பி.) குமாரதுங்கா கூட்டணி வைத்துக்கொண்டதுதான் என்று கூறப்படுகிறது.
முன்னதாக ஜே.வி.பியுடன் உடன்பாடு வைத்துக்கொண்டு ஒரு ஆண்டுக்கு அந்தக் கட்சியின் ஆதரவை மக்கள்கூட்டணி கேட்டிருந்ததது. அதற்கு ஜே.வி.பி. தரப்பில் அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கையைபாதியாகக் குறைக்க வேண்டும் என்று அந்தக் கட்சி வேண்டுகோள் விடுத்தது. மக்கள் கூட்டணியும் அதை ஏற்று பலஅமைச்சர்களின் பதவியைப் பறித்தது.
இதையடுத்து திசநாயகே, மகிந்தா விஜய சேகரா, விஜயபால மென்டிஸ் ஆகிய பதவி இழந்த அமைச்சர்கள்கட்சியை விட்டும் விலகினர்.
எதிர்கட்சித் தலைவரான ரணில்விக்ரமசிங்கே தலைமையிலான யுனைட்டெட் நேஷனல் பார்ட்டிக்கு 88 எம்.பிக்கள்ஆதரவாக உள்ளனர்.
மேலும் தமிழ் கட்சிகளின் 9 எம்.பிக்களும் ரணிலுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறியுள்ளனர்.
இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் சந்திரிகா அரசு தப்புவது மிகக்கடிமான ஒன்று என்றுகூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications