இலவச காலணி ஊழல்: நீதிமன்றத்தில் ஆஜராகாத மாஜி அமைச்சருக்கு பிடிவாரண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இலவச காலணி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அதிமுகவைச் சேர்ந்த முன்ளாள் அமைச்சர் ஈஸ்வரமூர்த்தி, வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தால் அவருக்கு ஜாமீனில் வரமுடியாதபிடிவாரண்டை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஜெயலலிதா முதன் முதலாக முதல்வராக பதவி வகித்த போது இலவச காலணி வழங்கியதில் ஊழல் நடந்ததாகஅதிமுகவின் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, ஈஸ்வர மூர்த்தி உள்ளிட்ட 20 பேர் மீது கடந்த திமுக அரசு வழக்குதொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணை 3வது தனி நீதிமன்றத்தில், நீதிபதி அன்பழகன் முன்னிலையில் நடந்து வருகிறது. இந்தவழக்கு விசாரணை நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டஇந்திராகுமாரியும், ஈஸ்வர மூர்த்தியும் ஆஜராகவில்லை.

இந்திரகுமாரி சார்பாக அவரது வழக்கறிஞர் ஆஜராகியிருந்தார். ஆனால் ஈஸ்வர மூர்த்தியும் அவரதுவழக்கறிஞரும் ஆஜராகவில்லை.

இதையடுத்து ஈஸ்வரமூர்த்திக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்-தார் நீதிபதி அன்பழகன்.

அதன் பின்னர் வழக்கு விசாரணையை இந்த மாதம் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+