உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் பரூச்சா
டெல்லி:
உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி எஸ்.பி. பரூச்சா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவைஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் பிறப்பித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான நீதிபதி பரூச்சாவை அந்தப் பதவிக்கு நியமித்து,ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இவர் வரும் நவம்பர் 1ம் தேதி புதிய தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
1937ம் ஆண்டு மே மாதம் 6ம் தேதி பிறந்த நீதிபதி பரூச்சா, தனது 23ம் வயதில் மும்பை உயர் நீதிமன்றத்தில்வக்கீலாகப் பணியைத் தொடங்கினார்.
பிறகு 1977ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து கடந்த1992ம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிவருகிறார்.
"நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தியபோது, தடா கைதிகளை விடுவிக்க முடிவெடுத்த கர்நாடக மற்றும் தமிழகஅரசுகளைக் கண்டித்தது" மற்றும் "ஜெயலலிதா தமிழக முதல்வராகப் பதவியேற்றது செல்லாது என்று கடந்த மாதம்தீர்ப்பளித்தது" ஆகியவை இவர் வழங்கிய முக்கியத் தீர்ப்புகளில் குறிப்பிடத்தக்கவையாகும்.












Click it and Unblock the Notifications