For Daily Alerts
Just In
மாதந்தோறும் நீர் இருப்பை ஆராயவும் உத்தரவு
டெல்லி:
தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள நீர் இருப்பு நிலைமையை ஒவ்வொரு மாதமும் காவிரிகண்காணிப்புக் குழு ஆய்வு செய்ய வேண்டும் என்று காவிரி நதி நீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நடுவர் மன்றத் தீர்ப்பின் படி, கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி நதி நீர்ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு மாதமும், 2 மாநிலங்களிலும் உள்ள நீர் நிலைமைகளை காவிரி கண்காணிப்புக் குழு ஆய்வுசெய்ய வேண்டும் என்றும் ஆணையம் கூறியுள்ளது.
தேவைப்பட்டால், அக்குழுவின் பரிந்துரையின் படி ஆணையத்தின் அவசரக் கூட்டம் கூட்டப்படும் என்றும்ஆணையம் தெரிவித்துள்ளது.
Story first published: Thursday, October 11, 2001, 5:30 [IST]