கோவையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
கோவை:
கோயம்புத்தூரில் பள்ளிக்கு வெடி குண்டு மிரட்டல் வந்ததையடுத்து நகர் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில் 1994ம் ஆண்டு நடந்த தொடர் வெடிகுண்டு சம்பவங்களை இன்னும் யாரும் மறக்கவில்லை.
இந் நிலையில் கோவையின் முக்கிய தனியார் பள்ளிகக்கு இன்று பிற்பகலில் மர்மத் தொலைபேசி அழைப்பு வந்தது.அதில் பேசிய நபர் பள்ளியில் வெடி குண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவை சிறிது நேரத்தில் வெடித்துச்சிதறும் என்றும் மிரட்டல் விடுத்தான்.
இதையடுத்து ஆசிரியர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். உடனடியாக போலீசாருக்குத் தகவல் கொடுத்துவிட்டுமாணவர்களை பள்ளியில் இருந்து வெளியேற்றினர்.
போலீசார் மோப்ப நாய்ப்படை, வெடிகுண்டு நிபுணர்களுடன் பள்ளிக்கு விரைந்து வந்து சோதனையில்ஈடுபட்டனர். தீயணைப்பு வண்டிகளும் விரைந்து வந்தன.
இதற்கிடையே பள்ளியில் வெடி குண்டு வைக்கப்பட்டிருப்பதாக தகவல் நகர் முழுவதும் பரவியது. தங்கள்குழந்தைகளைத் தேடி நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் பதற்றத்துடனும் அச்சத்துடனும் பள்ளிக்கு ஓடி வந்தனர்.
இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
போலீசார் நடத்திய சோதனையில் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை.