பின் லேடனை ஒப்படைக்க மீண்டும் வாய்ப்பளிக்கும் புஷ்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடனை ஒப்படைக்க தலிபான் அரசுக்கு இரண்டாவது வாய்ப்பு அளித்துள்ளார்அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்.
இந்நிலையில், பின் லேடனை ஒப்படைத்தால் ஆப்கான் மீதான தாக்குதலை வாபஸ் பெற்றுக் கொள்கிறோம் என்றுபுஷ் கூறியுள்ளார்.
"பின் லேடனையும் அவருடைய ஆதரவாளர்கள் அத்தனை பேரையும் உடனடியாக ஒப்படையுங்கள். நாங்கள்தாக்குதலை நிறுத்திக் கொள்கிறோம்" என்று தலிபான்களைக் கேட்டுக் கொண்டுள்ளார் புஷ்.
மேலும், "பின் லேடனைப் பிடிப்பதற்கு ஆண்டுக் கணக்கில் கூட ஆகலாம். அவர் இப்போது உயிருடன்இருக்கிறாரா, இல்லையா என்றே தெரியவில்லை" என்றும் புஷ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications