எஸ்.எஸ்.எல்.சி. தனித் தேர்வுகள் தள்ளிவைப்பு
சென்னை:
இந்த மாதம் நடைபெறவிருந்த எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் ஒ.எஸ்.எல்.சி. தேர்வுகள் உள்ளாட்சித் தேர்தல் காரணமாகஅடுத்த மாதம் மாதம் நடைபெறும் என்று அரசுத் தேர்வாணைய இயக்குனர் கூறியுள்ளார்.
இந்த மாதம் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறவுள்ளதால் அன்றைய தேதிகளில் நடைபெறுவதாகஇருந்த எஸ்.எஸ்.எல்.சி, ஓ.எஸ்.எல்.சி, ஆங்கிலோ இந்தியன் மற்றும் மெட்ரிகுலேஷன் தனித் தேர்வுகளுக்கானதேர்வுகள் வேறு தேதிகளுக்கு தள்ளி வைக்கபட்டிருந்தன.
இந்நிலையில் இந்த மாதம் நடைபெறவிருந்த எஸ்.எஸ்.எல்.சி, ஒ.எஸ்.எல்.சி, தேர்வுகள் அடுத்த மாதம் மாதம்நடைபெறும் என்று அரசுத் தேர்வாணை இயக்குனர் நேற்று (வியாழக்கிழமை) வெளிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது:
இந்த மாதம் 22ம் தேதி நடைபெறவிருந்த எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் ஓ.எஸ்.எல்..சி மொழித்தாள் ஒன்றுக்கான தேர்வுஅடுத்தமாதம் 5ம் தேதி காலை நடைபெறும்.
23ம் தேதி நடைபெறவிருந்த மொழித்தாள் இரண்டுக்கான தேர்வு அடுத்தமாதம் 6ம் தேதி காலை நடைபெறும்.
வரும் 22ம் தேதி நடைபெறவிருந்த ஆங்கிலோ - இந்தியன் மொழித்தாள் தேர்வு அடுத்த மாதம் 7ம் தேதி காலைநடைபெறும்.
வரும் 22ம் தேதி நடைபெறவிருந்த மெட்ரிகுலேஷன் மொழித்தாள் ஒன்றுக்கான தேர்வு அடுத்தமாதம் 7ம் தேதிநடைபெறும்.
வரும் 23ம் தேதி நடைபெறவிருந்த மெட்ரிகுலேஷன் மொழித்தாள் இரண்டுக்கான தேர்வு அடுத்தமாதம் 8ம் தேதிநடைபெறும் என்று கூறியுள்ளார்.