For Daily Alerts
Just In
ஈரானிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் மீது கல் வீச்சு
ஜாகேதான் (ஈரான்):
ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க தாக்குதல்களைக் கண்டித்து, ஈரானில் நடந்த போராட்டத்தின் போது,ஜாகேதான் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் தாக்கப்பட்டது.
அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானுக்கும் எதிராக கோஷங்களை எழுப்பிய அவர்கள், அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ்ஷின் உருவ பொம்மையையும் எரித்தனர்.
பின்னர் திடீரென்று ஆர்ப்பாட்டக்காரர்கள் பாகிஸ்தான் தூதரகத்தின் மீது கற்களை எறிய ஆரம்பித்தனர். இதில்அந்தக் கட்டடம் பயங்கரமாகச் சேதமடைந்தது. ஆனால் சேத விவரம் பற்றி அதிகாரிகள் எந்தத் தகவலும்கூறவில்லை.
அங்கு இன்னும் போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது.
Comments
Story first published: Friday, October 12, 2001, 5:30 [IST]