பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பதட்டம்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருவதை எதிர்த்து, பாகிஸ்தானில் உள்ள பல மதவாதஇயக்கங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தவுள்ளதை அடுத்து,பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் கடும் பதட்டம் நிலவுகிறது.

வழக்கமான வெள்ளிக்கிழமை பிரேயரை முடித்துவிட்டு, ஜமாய்த்-உலேமா-இ-இஸ்லாம் நடத்தவுள்ள இந்தஆர்ப்பாட்டப் பேரணி, பிற்பகலில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அமெரிக்காவின் தாக்குதல்கள் ஆரம்பமானதிலிருந்தே, பாகிஸ்தானிலுள்ளபல்வேறு மதவாத அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

பல இடங்களில் பெரும் வன்முறையில் முடிந்த இந்தப் போராட்டங்கள், ஏராளமான உயிர்களையும் பலிவாங்கியுள்ளன.

இந்நிலையில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நடக்கவுள்ளது. மேலும், அமெரிக்க தரைப்படையினர்பயன்படுத்துவதற்காக பாகிஸ்தான் 2 விமானத் தளங்களைக் கொடுத்துள்ளதையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள்மிகவும் கொதித்துப் போயுள்ளனர்.

இதனால் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியின்போது பெரும் கலவரம் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தஎல்லைப்பகுதி முழுவதும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இப்பகுதிகள் முழுவதும் பெரும் பதட்டத்துடன் காணப்படுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+