தூத்துக்குடி: 31 முறை சிறை சென்றவர் மீண்டும் கைது
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் 31 முறை சென்ற ஒருவரை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
இது குறித்த விவரம்:
தூத்துக்குடி தென்பாகம் போலீசார் ரோந்து சென்று கொண்டிருந்த போது தாளமுத்துநகர் அருகே சந்தேக்தைதூண்டும் வகையில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர்
விசாரணையின் போது அவர் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்ததை சேர்ந்தவர் என்பதும், அவரது பெயர்ஆரோக்கியசாமி (வயது 35) என்பதும் தெரியவந்தது.
அவர் தூத்தக்குடியில் பல இடங்களில் திருடியிருப்பதும், அவர் ஏற்கனவே 31 முறை திருட்டு வழக்கில் கைதுசெய்யப்பட்டு தண்டனை பெற்றவர் என்பதும் விசாரணையின் போது தெரியவந்தது.
இவரை கைது செய்த போலீசார் இவரை கோர்டில் ஆஜர்படுதினர். அதன் பின் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரிடமிருந்து 30 கிராம் தங்கநகைகள், 1 செல்போன், கடிகாரம் உள்ளிட்ட ரூ 25 ஆயிரம் மதிப்புள்ளபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.