நாளை முடிகிறது முதல் கட்ட தேர்தல் பிரச்சாரம்
சென்னை:
செவ்வாய்க்கிழமை உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள இடங்களில் நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) பிரச்சாரம்முடிவடையவுள்ளதையடுத்து, தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுளளனர்.
வரும் 16 மற்றும் 18ம் தேதிகளில் தமிழகத்தில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.முதற்கட்ட தேர்தல் 16ம் தேதி சென்னை, சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகிய 4 மாநகராட்சிகளிலும், 44நகராட்சிகளிலும், 307 பேரூராட்சிகளிலும், 195 ஊராட்சிகளிலும் நடைபெறவுள்ளது.
இதற்கான பிரச்சாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அனைத்து அரசியல்கட்சியினரும் இறுதி கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மேயர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் மு.க. ஸ்டாலின், அதிமுக சார்பில் போட்டியிடும் பாலகங்கா,காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வசந்தகுமார் ஆகியோர் வீதி வீதியாக திறந்த ஜீப்பில் சென்று தீவிர பிரச்சாரத்தில்ஈடுபட்டுவருகின்றனர்.
சேலம், திருநெல்வேலி, கோயம்புத்துர் மேயர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களும், நகராட்சி, பேரூராட்சி,ஊராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
கட்சி தொண்டர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு ஒலி பெருக்கி மூலம் பிரச்சாரம் செய்துவருகிறார்கள்.
18ம் தேதி மதுரை, திருச்சி மாநாகராட்சிக்கும், எஞ்சியுள்ள நகராட்சி, பேரூராட்சி ,ஊராட்சிகளுக்கும் தேர்தல்நடைபெறும்.












Click it and Unblock the Notifications