For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்துத் தேர்வுக்கான தடை நீக்கம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான எழுத்துத் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையைதமிழ்நாடு மாநில நிர்வாக தீர்ப்பாணையம் நீக்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழக பள்ளிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப முதுகலை பட்டதாரிஆசிரியர்களை தேர்ந்தெடுக்க விளம்பரம் செய்தது. மொத்தம் 634 ஆசிரியர் காலியடங்கள் நிரப்பப்படும் என்றும்அரசு அறிவித்திருந்தது.

இந்த தேர்வை எழுத இளநிலை, முதுநிலையில் ஒரே பாடத்தில் பட்டம் பெற்று, பி.எட் பயிற்சி பெற்றவர்கள்மட்டுமே தகுதியுள்ளவர்கள்.

மேலும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் செப்டம்பர் மாதம் 25ம் தேதிக்குள் இந்ததேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும், எழுத்துத் தேர்வு அக்டோபர் மாதம் 6ம் தேதி நடைபெறும் என்றும்அந்த விளம்பரத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், "முதுகலை பட்டப்படிப்பில் எடுத்துக் கொள்ள பாடத்தை மட்டும் கணக்கில் கொள்ள வேண்டும்.ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் 15 ஆண்டுகளாக வேலை வாய்ப்புஅலுவலகத்தில் பதிவு செய்து என்போல் காத்திருப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள்" என்று நாமக்கல்-பரமத்தியூரைச்சேர்ந்த பழனிவேலு என்பவர் சென்னை தமிழ்நாடு நிர்வாக தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாய தலைவர் நீதிபதி அப்துல் வகாப், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கானஎழுத்துத் தேர்வை நடத்த இடைக்கால தடை விதித்து சென்ற மாதம் தீர்ப்பளித்தார்.

இந்நிலையில் இடைக்கால தடையை நீக்க வேண்டும் என்று ஆசிரியர் தீர்ப்பாயம் மனுத் தாக்கல் செய்தது.இதையடுத்து இடைக்கால தடையை நீக்கி அப்துல் வகாப் தீர்ப்பளித்தார். ஆனாலும் வழக்கு முடியும்வரை தேர்வுமுடிவை வெளியிடக்கூடாது என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X