தரைப் படையை முழு மூச்சாக இறக்க அமெரிக்கா தீவிரம்
வாஷிங்டன்:
தன் விமானங்களும் ஏவுகணைகளும் ஆப்கானிஸ்தானைத் தாக்க ஆரம்பித்து ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில்,தரை வழியாகவும் தாக்குதலைத் துவக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே தாக்குதல் நடத்தி அழிக்கப்பட்டுள்ள இடங்கள் வழியாகத்தான் அமெரிக்க துருப்புக்கள் நுழைந்துதலிபான் மற்றும் அல்-க்வைதா தீவிரவாத முகாம்களுக்குச் சென்று தாக்குதல் நடத்தவுள்ளன.
ஏற்கனவே தலிபான்களுக்கு எதிராகக் கடுமையாகத் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கும் நார்தர்ன்அலையன்ஸ் படையினருடன் கூட்டு சேர்ந்து கொண்டால், தலிபான்களை வேகமாக முற்றுகையிட முடியும் என்றும்அமெரிக்கா நம்புகிறது.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தானின் மற்றொரு அண்டை நாடான உஸ்பெகிஸ்தான் நாட்டின் விமானத்தளங்களையும் வான் பகுதியையும் பயன்படுத்தவும் அமெரிக்கா இன்று முறைப்படி அனுமதி வாங்கியுள்ளது.
எனவே, தற்போது தலிபான்கள் மீது பலமுனைத் தாக்குதல்களை நடத்துவதற்கு முழு மூச்சில் தீவிரமாகஈடுபட்டுள்ளது அமெரிக்கா.












Click it and Unblock the Notifications