For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்திற்கு விரைவில் கிருஷ்ணா நீர்?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்திற்கு கிருஷ்ணா நதி நீரை திறந்து விடுவது பற்றி தமிழக-ஆந்திர தலைமைச் செயலாளர்கள் விரைவில் கூடிபேசி முடிவு செய்வார்கள் என்று தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் குற்றாலிங்கம் கூறியுள்ளார்.

தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு எப்போது தண்ணீர்திறந்துவிடப்படும என்று நிருபர்கள் குற்றாலிங்கத்திடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து குற்றாலிங்கம்கூறுகையில்,

ஆந்திராவிலிருந்து கிருஷ்ணா நீரை திறந்துவிடுவது குறித்து எந்த தகவலும் இதுவரை வரவில்லை. இரு மாநிலதலைமைச் செயலாளர்களும் அடிக்கடி சந்தித்து நிலுவையில் உள்ள பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள்.

வரும் 18ம் தேதி இரண்டு மாநில தலைமைச் செயலாளர்களும் பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்தார்கள். ஆனால்பிரதமர் வருகை காரணாமாக இந்த பேச்சுவார்த்தை தள்ளிப் போகக்கூடும்.

ஆனாலும் விரைவில் கூட்டம் நடக்கும். அப்போது கிருஷ்ணா நதி நீரை தமிழகத்திற்கு திறந்துவிடுவது குறித்துமுடிவு செய்யப்படக்கூடும்.

மேலும் ஆந்திராவில் ஸ்ரீசைலம் அணை நிரம்பி, நாகார்ஜுனா, சோமசீலா அனணகள் நிரம்பிய பின்தான்கண்டலேறு நீர் தேக்கத்திற்கு தண்ணீர் வரும். அங்கிருந்துதான் பூண்டி நீர் தேக்கத்திற்கு தண்ணீர்வரவேண்டும்.

மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 8 ஆயிரத்து 115 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து விநாடிக்கு3 ஆயிரத்து 440 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X