மேயர் தேர்தல் முடிவை வெளியிட தடை இல்லை: உயர் நீதிமன்றம் திடீர் பல்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மேயர் தேர்தலில் மு..க.ஸ்டாலின் போட்டியிடுவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்தொடரப்பட்ட வழக்கில், மேயர் தேர்தல் முடிவை வெளியிட கூடாது என்று நேற்று காலையில் தடை விதித்தநீதிமன்றம், மாலையில் அந்தத் தடையை நீக்கி உத்தரவிட்டது.

சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தல் வரும் 16ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதில் தற்போதையமேயர் ஸ்டாலின் உட்பட 20 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் மேயராக இருக்கும்போது ஸ்டாலில் மீண்டும் மேயர் பதவிக்கு போட்டியிடக் கூடாது என்றசட்டப்பிரிவை எடுத்துக்காட்டி சென்னையைச் சேர்ந்த வக்கீல் ஸ்ரீதர் குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில்மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, மற்றும நீதிபதிசிவப்ரமணியம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த வழக்கை வரும் 18ம் தேதிக்குத் ஒத்திவைத்தது.

மேலும், உயர்நீதிமன்றம் அடுத்த உத்தரவு வெளியிடும் வரை சென்னை மேயர் தேர்தல் முடிவுகளை தேர்தல்கமிஷன் வெளியிடக் கூடாது என்றும் அவர்கள் முதலில் உத்தரவிட்டனர்.

ஆனால் பிற்பகலில் மு.க. ஸ்டாலின் தரப்பில் வழக்கறிஞர் சோமயாஜுலு வாதாடினார். அவருடையவாதத்தின்போது:

மேயர் பதவியில் இருப்பவர் 5 ஆண்டு காலத்தில் தகுதியிழந்தால்தான் மறு தேர்தலில் போட்டியிட முடியாது.ஸ்டாலின் 1996ம் ஆண்டு நடைபெற்ற மேயர் தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து மேயராக இருந்து வருகிறார்.

சென்னை முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டவிதிகள் 28, 29 ஆகியவை நீக்கப்பட்-டுவிட்டன. ஆனால்துரதிர்ஷ்டவசமாக 30வது பிரிவு நீக்கப்படவில்லை. மேலும் மனுதாரர் தேர்தலில் போட்யிடவில்லை. அவர்இடைக்கால தடை கோரியும் மனு தாக்கல் செய்யவில்லை.

எனவே தேர்தல் முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்தது தவறு என்று சோமயாஜுலு வாதாடினார்.

இதையடுத்து மனுதாரரின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் பாலசுப்ரமணியத்திற்கு நீதிபதிகள், கடும் கண்டனம்தெரிவித்தனர். இதன் பின் நீதிபதிள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது:

காலையில் நாங்கள் மனுவை விசாரித்த போது இடைக்காலத் தடை கேட்டு மனு செய்யவில்லை என்றுகூறியிருந்தால் இடைக்கால தடை வித்திருக்க மாட்டோம்.

மதுரை, கோயம்புத்தூர் மாநகாராட்சிக்கு தான் விதி திருத்தப்பட்டுள்ளது சென்னை மாவட்டத்திற்குதிருத்தப்படவில்லை என்று கூறியதாலும், வாய் மொழியாக தடை கேட்டதாலும் நாங்கள் தடை விதித்தோம்.

இந்த ரிட் மனுவை விசாரணைக்கு மட்டும் அனுமதிக்கிறோம். தேர்தல் கமிஷனர், ஸ்டாலின், சென்னை மாநகராட்சிகமிஷனர் ஆகியோர் 8 வாரத்தில் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம்.

ஸ்டாலின் மேயர் தேர்தலில் போட்டியிடலாம். தேர்தல் முடிவும் வெளியிடப்படலாம். தேர்தலில் யார்தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர் பணியைத் தொடரலாம். ஆனால் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்படவேண்டும்.

இனி இந்த மனு வழக்கமான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+