உள்ளாட்சித் தேர்தல் - வாக்குச் சாவடி அலுவலர்களின் பணிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச் சாவடி அலுவலர்கள் செய்ய வேண்டிய பணிகளை தேர்தல் கமிஷன்வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வரும்16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவுநடைபெறுகிறது.

அப்போது ஒவ்வொரு வாக்குச் சாவடிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலர்கள் செய்ய வேண்டியபணிகள் பற்றிய விவரம் வறுமாறு:

அலுவலர்களின் பணிகள் வாக்குப் பதிவுக்கு முன், வாக்குப் பதிவு நடந்துகொண்டிருக்கும் போது மற்றும் வாக்குப்பதிவுக்குப் பின் என்று 3 கட்டமாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி வாக்குப் பதிவுக்கு முந்தைய நாளே அலுவலர்கள் வாக்குச் சாவடிக்கு வந்து, வாக்குப் பதிவு நடக்கும்இடம், வாக்குப் பெட்டி இருக்கும் இடம் மற்றும் முகவர்கள் ஆகியவற்றைப் பார்த்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மழைவந்தால் வாக்குப் பதிவு பாதிக்காத வகையில் வாக்குச்சாவடி உள்ளதா என்று பார்க்க வேண்டும். வாக்குப்பதிவுக்குத் தேவையான மை, வாக்குச் சீட்டுக்கள், வாக்காளர் பட்டியல் ஆகியவற்றைச் சரிபார்த்துக்கொள்ளவேண்டும்.

வாக்குப் பதிவு ஆரம்பிப்பதற்கு முன்பே வாக்குச் சாவடிக்கு வந்து வேட்பாளர் பட்டியல் ஒட்டுதல், 100 வாக்குச்சீட்டுக் கட்டுகளின் பின்புறம் கையெழுத்திடுதல் ஆகியவற்றைச் செய்து முடிக்க வேண்டும்.

வேட்பாளர்களின் முவர்களைச் சரிபார்த்துவிட்டு காலை 7.30 மணிக்கு வாக்குப் பதிவை ஆரம்பிக்கவேண்டும்.மாலை 5.30 மணிக்கு வாக்குச் சாவடியின் நுழைவு வாயிலை மூடிவிட்டு, உள்ளேயிருக்கும் வாக்காளர்களுக்குமட்டும் வாக்குச் சீட்டுகளைக் கொடுக்க வேண்டும்.

பிறகு எஞ்சிய வாக்குச் சீட்டுக் கணக்கு, மை, உட்பட அனைத்துப் பொருட்களையும், வாக்குப் பெட்டியை சேகரிக்கவரும் அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+