வாஜ்பாய் 17ம் தேதி சென்னை வருகை - பாதுகாப்பு தீவிரம்
சென்னை:
பாரதிய ஜனதாக் கட்சியின் அகலி இந்தியத் தலைவர் ஜனா கிருஷ்ணமுர்த்தியின் இல்லத் திருமணவிழாவில்கலந்துகொள்வதற்காக பிரதமர் வாஜ்பாய் வரும் 17ம் தேதி சென்னைக்கு வருகிறார்.
ஜனா கிருஷ்ணமூர்த்தியின் மகனுடைய இல்லத்திருமண விழா வரும் 17ம் தேதி சென்னையில் நடக்கிறது.
அதையொட்டி வாஜ்பாய் வருவதையடுத்து, சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக அரசின் உயர்அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
தமிழக தலைமைச் செயலாளர் சங்கர், உள்துறைச்செயலாளர் நரேஷ்குப்தா, டி.ஜி.பி. நெய்ல்வால், சென்னைபோலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் மற்றும் உயர் அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில்கலந்துகொண்டனர்.
ஆப்கானில் போர் நடந்துவருவதால் சென்னை வரும் பிரதமருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்காக உள்ளூர் போலீசுடன், துணை ராணுவப்படையையும் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தவுள்ளது.
மேலும் தமிழகம் முழுவதும் உளவுத்துறை முடுக்கிவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications