For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெர்ணான்டசை திரும்ப அழைத்ததில் தவறில்லை - கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மத்திய அமைச்சரவையில் ஜார்ஜ் பெர்ணான்டஸ் மீண்டும் சேர்க்கப்பட்டததில் தவறில்லை என்று முன்னாள்முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கூறினார்.

மத்தியில் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவை 6வது முறையாக இன்று விரிவுசெய்யப்பட்டது. இதில் தெஹல்கா இணையதளம் வெளியிட்ட ஆயுத பேர ஊழலில் முன்னாள் ராணுவ அமைச்சர்ஜார்ஜ் பெர்ணான்டசுக்கு தொடர்புள்ளதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து அவர் ராஜினாமா செய்தார்.

தற்போது மீண்டும் அவர் மத்திய அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, மீண்டும் அவருக்கு பாதுகாப்புத்துறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பலத்த எதிர்ப்புத்தெரிவித்துவருகின்றன.

இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:

ஜார்ஜ் பெர்ணான்டஸ் தெஹல்கா விவகாரத்தில் தன் மீது குற்றம் சாட்டப்பட்டவுடன், அதற்கு தார்மீகப்பொறுப்பேற்று பதவி விலகினார்.

அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாத பட்சத்தில், தெஹல்கா விவகாரத்தில் அவருக்குச் சம்பந்தம்இல்லை என்பது தெளிவாக விளங்குகிறது. எனவே இப்போது மீண்டும் அவர் அமைச்சர் பதவியேற்பதில்தவறில்லை.

இதைக் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ்காரர்கள் எதிர்க்கிறார்கள்.
3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றவர் முதல்வராகப் பதவியேற்கலாம் என்பதை மட்டும் இவர்கள்ஆதரித்தார்கள். ஆனால் தண்டனையே வழங்கப்படாத ஒருவர் அமைச்சர் பதவியேற்பதை மட்டும் ஏன்எதிர்க்கிறார்கள் என்று தெரியவில்லை.

தண்டனைபெற்ற 2 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு அதிமுக அரசு மீண்டும் பதவி வழங்கியிருப்பதன் மூலம், தண்டனைபெற்றவர்களுக்குத்தான் பதவி வழங்க வேண்டும் என்ற விதியை அவர்கள் கடைபிடித்து வருகிறார்கள் என்றுதெரிகிறது.

இளங்கோவன் சொல்வதைப் போல விரைவில் சட்டசபைக்குத் தேர்தல் வருவதை திமுக விரும்பவில்லை என்றார்கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X