For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்திற்கு தினமும் 1 டி.எம்.சி. நீர்: கர்நாடகம்

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

சென்ற மாதம் (செப்டம்பர்) 6ம் தேதி முதல் தினமும் ஒரு டி.எம்.சிக்கும் அதிகமான தண்னீர் தமிழகத்திற்கு சென்றுகொண்டுள்ளது என்று கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் எச்.கே. பாட்டீல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை காப்பாற்ற கர்நாடகா தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று கர்நாடகாவை வலியுறுத்தக்கூறியும், காவிரி பிரச்சனை குறித்து விவாதித்து முடிவெடுக்கவும்காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்ட வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் கடந்த 10ம்தேதி பிரதமர் வாஜ்பாய் தலைமையில் காவிரி நதி நீர் ஆணைய கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு காவிரி நதி நீரை திறந்துவிடமுடியாத சூழ்நிலையில் இருப்பதாக கர்நாடகாகூறியது.

இதையடுத்து 15 டி.எம்.சி.நீரை திறந்துவிட வேண்டும் என்று காவிரி நதி நீர் ஆணையம் கர்நாடகாவிற்குஉத்தரவிட்டது.

இது குறித்து கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் எச்.கே. பாட்டீல் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தமிழகத்திற்கு 15 டி.எம்.சி தண்ணீர் திறந்து விடுமாறு காவிரி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 6ம்தேதி முதல் கர்நாடகாவிலிருந்து மேட்டூர் அணைக்கு தினமும் ஒரு டி.எம்.சிக்கும் அதிகமான நீர் சென்றுகொண்டிருக்கிறது.

தற்போது கர்நாடகா மற்றும் தமிழகம் ஆகிய இரு மாநிலங்களிலும் மழை பெய்து வருகிறது. கர்நாடகாவில்மழைக்காலம் முடியப் போகிறது. ஆனால் தமிழக்தில் இனிதான் மழைக்காலம் துவங்கப்போகிறது.

இரண்டு மாநிலங்களின் நீர் இருப்பை கணக்கிட்டு இந்த விஷயத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று ஆணைஉத்தரவிட்டுள்ளது.

தற்போது பெய்துள்ள மழையால் கர்நாடகாவில் நிலவி வந்த வறட்சி குறைந்துள்ளது. ஆனாலும் காவிரி பாசனபகுதிகளில் தேவையான அளவு மழை பெய்யவில்லை. அணைகளில் உள்ள நீர் மழை பெய்யாத பகுதிகளில்பாசனத்திற்கு பயன்படுத்தப்படும்.

இரு மாநில விவசாயிகளும் பாதிக்கப்படாத வகையில் நல்ல தீர்வு எடுக்கப்படும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X