மறுப்புடன் காலின் பாவலை வரவேற்கும் இந்தியா
இஸ்லாமாபாத்:
இந்தியா-பாகிஸ்தான் இடையே காஷ்மீர் தான் முக்கியப் பிரச்சனை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை காலின்பாவல் கூறியுள்ளதை இந்தியா மறுத்துள்ளது.
இன்று பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபுடன் பேச்சு நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய பாவல்,
இரு நாடுகளுக்கு இடையே காஷ்மீர் தான் முக்கியப் பிரச்சனையாக உள்ளது. இரு நாடுகளும் மனிதஉரிமைகளுக்கு மதிப்பு கொடுத்து பேச்சுவார்த்தை மூலம் இப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும்.
காஷ்மீரில் நடந்து வரும் தீவிரவாதத்தை ஏற்க முடியாது. கடந்த 1ம் தேதி காஷ்மீர் சட்டசபை நடந்த தாக்குதலைமன்னிக்க முடியாது. இத் தாக்குதலைக் கண்டித்த முஷாரபுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
முன்னதாக பாவலுடன பேசிய முஷாரப், தீவிரவாத்தை ஒழிக்க வேண்டுமானால் அதற்குக் காரணமான அரசியல்ஒடுக்குமுறைகளை ஒழிக்க வேண்டும் என்றார். காஷ்மீர் விவகாரத்தைத் தான் அவர் மறைமுகமாக இவ்வாறு சுட்டிக்காட்டியதாக இந்தியா கருதுகிறது.
ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதலை விரைவில் முடிக்க வேண்டும் எனவும் அவர் அமெரிக்காவிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த சந்திப்புக்குப் பின் காலின் பாவல் இந்தியா புறப்பட்டார்.
இதற்கிடையே, காஷ்மீர் தான் இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனை என்று காலின் பாவல் கூறியுள்ளகருத்துக்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நிருபமா ராவ்கூறுகையில், இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே முக்கிய பிரச்சனையே தீவிரவாதம் தான், காஷ்மீர் அல்ல என்றார்.
தனது கருத்தை காலின் பாவலிடமும் இந்தியா தெளிவாக எடுத்துரைக்கும்.












Click it and Unblock the Notifications