ஆலந்தூரில் கள்ள ஓட்டு: தட்டிக் கேட்ட அதிகாரியை மிரட்டினார் பெண் அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆலந்தூரில் சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி தலைமையில் 60 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் வேன்களில்சென்று பகிரங்கமாகக் கள்ள ஓட்டுப் போட்டதாகப் புகார் கூறப்பட்டுள்ளது. இதைத் தட்டிக் கேட்ட அதிகாரியைவேலையை வீட்டு நீக்கிவிடுவதாக அவர்கள் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

சென்னை அடுத்த ஆலந்தூர் நகராட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்க வாக்குப்பதிவு இன்று (வியாழக்கிழமை)நடக்கிறது.

ஆலந்தூர் நகராட்சிக்குட்பட்ட நங்கநல்லூர் பகுதியில் இன்று காலை அமைச்சர் வளர்மதி தலைமையில் 60பேருக்கும் மேற்பட்ட அதிமுகவினர், 5க்கும் மேற்பட்ட வேன்களில் சென்று அந்தப் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் புகுந்து சராமாரியாகக் கள்ள ஓட்டுப் போட்டுள்ளனர்.

அப்போது அவர்களைத் தட்டிக் கேட்ட தேர்தல் அதிகாரி ஞானதாஸ் என்பவரை, வேலையை விட்டுநீக்கிவிடுவோம் என்று வளர்மதி மிரட்டினார்.

மேலும் பல வாக்குச் சாவடிகளை அவர்கள் கைப்பற்றி வாக்குச் சீட்டுக்கள் அனைத்திலும் கள்ள ஓட்டுப்போட்டுவிட்டு அவர்கள் ஓடிவிட்டனர். ஆனால் எதையும் கண்டு கொள்ளாமல் போலீசார் இருந்துவிட்டனர்.

வளர்மதி தலைமையில் இந்தக் கும்பல் அந்தப் பகுதி முழுவதும் இன்னும் சுற்றிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இவ்வாறு பகிரங்கமாகக் கள்ள ஓட்டுப் போடுவதை போலீசார் கண்டுகொள்ளாமல் நிற்பதைப் பார்த்த பொதுமக்கள்கலவரமடைந்து, ஓட்டுப் போடாமல் வீட்டுக்குத் திரும்புகின்றனர் என்று கூறப்படுகிறது.

மேலும் வரிசையில் நின்றுகொண்டிருந்த பெண் வாக்காளர்களிடம் அவர்கள் தவறாக நடக்க முயன்றதாகவும்அங்கிருந்த வாக்காளர்கள் கூறுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+