வன்முறை, கள்ள ஓட்டு... சென்னையில் 42 பேர் கைது
சென்னை.
தமிழக உள்ளாட்சி தேர்தலின் முதல் கட்ட வாக்குபதிவின் போது வன்முறையில் ஈடுபட்டது, கள்ள ஓட்டு போட்டதுபோன்ற குற்றத்திற்காக சென்னையில் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகாரட்சி உள்ளிட்ட 4 மாநகராட்சிகளுக்கும், பல நகராட்சிகளுக்கும், பேரூராட்சிகளுக்கும்,ஊராட்சிகளுக்கும் முதல் கட்டமாக செவ்வாய்க்கிழமை வாக்கு பதிவு நடைபெற்றது.
வாக்குபதிவின் போது சென்னையில் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டனர். கள்ள ஓட்டும் போட்டனர்.திமுகவினரும் கள்ள ஓட்டு போட்டதாக போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் திமுக பிரமுகர் தனசேகர் தலைமையில் திமுகவினர் வன்முறையில்ஈடுபட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக திமுகவினர் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சைதாப்பேட்டையைச் சேர்ந்த 6 பேரும்,தேனாம்ப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 5 பேரும், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 7 பேரும், சட்டக்கல்லூரிபகுதியில் 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் வன்முறையில் ஈடுபட்டதாகவும், கள்ளஓட்டு போட்ட குற்றங்களுக்காகவும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.