சென்னைக்கு வந்த ஆந்த்ராக்ஸ் கடிதம்
சென்னை:
சென்னை விமானப்படை அதிகாரி ஒருவருக்கு வந்த பார்சலில் அமெரிக்காவை எதிர்த்துவாசகங்கள் எழுதப்பட்டிருந்ததால், அதில் ஆந்த்ராக்ஸ் கிருமி இருக்கலாம் என்ற அச்சம்பரவியுள்ளது.
சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் சிக்னல் அதிகாரியாக இருப்பவர் பிரஜாபதி.இவருக்கு செவ்வாய்க்கிழமை ஒரு பார்சல் வந்துள்ளது. அதைப் பிரித்துப் பார்த்தபிரஜாபதி, அதில் பெளடர் டப்பா இருந்தது குறித்துக் குழம்பினார். அதைப் பிரித்துப்பார்த்தபோது அதில் ஒரு கடிதம் இருந்தது.
கடிதத்தில், ஆப்கானிஸ்தானை தாக்கும் அமெரிக்காவின் செயலுக்கு இந்தியாவும் துணைபோயுள்ளது. இதற்குரிய பலனை இந்தியா அனுபவித்தே தீர வேண்டும் என்று இருந்தது.இதையடுத்து பயந்து போன பிரஜாபதி, அதில் ஆந்த்ராக்ஸ் கிருமி இருக்கலாம் என்றுசந்தேகப்பட்டார்.
இதையடுத்து கடிதத்தை சோலையூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீஸார்அந்த பார்சலை அப்படியே நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி அதுஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பிரஜாபதியும்சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.
இது போன்ற கடிதங்கள் உலகம் முழுவதும் அனுப்பப்பட்டு வருகின்றன என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications