For Daily Alerts
Just In
தோல்வி பயத்தால் அதிமுகவினர் வன்முறை: ராமதாஸ்
திண்டிவனம்:
தோல்வி பயம் காரணமாகவே அதிமுகவினர் உள்ளாட்சித் தேர்தலின்போது வன்முறையைத் தூண்டி வருகின்றனர்என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
2வது கட்ட உள்ளாட்சித் தேர்தலையொட்டி திண்டிவனத்தில் அவர் தன்னுடைய வாக்குப் பதிவைச் செலுத்திவிட்டுநிருபர்களிடம் ராமதாஸ் பேசியபோது:
பீகார் மாநிலத்தில்தான் இது போன்ற தேர்தல் வன்முறைகள் நடந்து வந்துள்ளன. தற்போது அதிமுகவினர்தமிழகத்தை பீகாராக மாற்றுவதற்கு முயன்று வருகின்றனர்.
ஆனால் பாமக இதை ஒருபோதும் அனுமதிக்காது. தோல்வி பயத்தால் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஆனாலும் இந்த உள்ளாட்சித் தேர்தலில் பாமக அமோக வெற்றி பெறும். முதல் முறையாக உள்ளாட்சித் தேர்தலில்மாம்பழச் சின்னத்தில் பாமக போட்டியிடுவது பெருமை தருகிறது என்றார் ராமதாஸ்.
Story first published: Thursday, October 18, 2001, 5:30 [IST]