2வது கட்ட வாக்குப் பதிவு துவங்கியது
சென்னை:
தமிழக உள்ளாட்சித் தேர்தலின் 2வது கட்ட வாக்குப் பதிவு வியாழக்கிழமை (இன்று) காலை 7.30 மணிக்குத்துவங்கியது.
முதல்கட்ட வாக்குப் பதிவின் போது, சென்னையில் மட்டுமல்லாது, தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் வன்முறை,கள்ள ஓட்டு, வாக்குப் பெட்டியைத் தூக்கிச் செல்லுதல் போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.
இதனால், 2வது கட்டத் தேர்தல் கடும் பாதுகாப்புடன் நடைபெறவுள்ளது. வன்முறையாளர்களைக் கண்டதும் சுடஉத்தரவு பிறப்பிக்குமாறு காவல் துறையை தேர்தல் கமிஷன் கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கிடையே இன்று காலை 7.30 மணிக்குத் துவங்கியது. மதுரை, திருச்சி ஆகிய 2 நகராட்சிகளுக்கும், 58நகராட்சிகளுக்கும் 302 ஊராட்சிகளுக்கும் 109 பேரூராட்சிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.
கிராமப் பகுதிகளில் அதிகாலையிலேயே மக்கள் கூட்டம் கூட்டமாக வாக்குச் சாவடிக்கு வந்து வரிசையில் நின்றுவாக்களித்தனர்.
வன்முறைச் சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications