பின் லேடனின் முக்கிய தளபதி குண்டு வீச்சில் பலி
Subscribe to Oneindia Tamil
கெய்ரோ:
அமெரிக்க விமானங்களின் குண்டு வீச்சுத் தாக்குதலில் ஒசாமா பின் லேடனின் முக்கிய தளபதியான அபு பஸிர்அல்-மாஸ்ரி என்பவர் கொல்லப்பட்டார்.
அமெரிக்க விமானங்கள் வீசிய ஒரு குண்டு கீழே விழுந்து வெடிக்காமல் இருந்தது. அதை எடுத்த தலிபான் படைவீரர் ஒருவர், பின்னர் அதை வீசி எறிந்தார்.
அப்போது அந்த குண்டு பயங்கரமாக வெடித்தது. வெடித்த சிதறல்கள் பஸிரின் முதுகுத் தண்டைத் துளைத்துவிட்டன. படுகாயமடைந்த பஸிர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தார்.
இச்சம்பவத்தில் மேலும் 2 பேருக்கும் காயங்கள் ஏற்பட்டன என்று நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
எகிப்து நாட்டைச் சேர்ந்த பஸிர், ஆப்கானியப் பெண் ஒருவரை மணந்து ஆப்கானிஸ்தானிலேயே கடந்த 10ஆண்டுகளாக வசித்து வந்தார்.












Click it and Unblock the Notifications