பி.எஸ்.எல்.வி. வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது
சென்னை:
பி.எஸ்.எல்.வி. சி-3 ராக்கெட் இன்று (திங்கள்கிழமை) வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளித் தளத்திலிருந்து இன்று காலை 10.23 மணிக்கு பி.எஸ்.எல்.வி.ராக்கெட் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது என்று இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்)அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவின் டெரஸ்ட்ரியல் எக்ஸ்பரிமென்டல் சாட்டிலைட், பெல்ஜியம் நாட்டின் ப்ரோபா மற்றும் ஜெர்மனியின்டி.எல்.ஆர்"ஸ் பேர்டு ஆகிய செயற்கைக் கோள்களை பி.எஸ்.எல்.வி. சி-3 ராக்கெட் சுமந்து கொண்டு சென்றது.
ராக்கெட் கிளம்பிய 15 நிமிடங்களிலேயே 3 செயற்கைக் கோள்களும் புவிச் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.
பலவிதமான தடங்கல்களுக்குப் பிறகு, பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் பல முறை இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் வெற்றிகரமாக ஏவப்பட்டிருந்தாலும், முதல்முறையாக 3 செயற்கைக் கோள்களை இந்த ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவியிருப்பதும்குறிப்பிடத்தக்கதாகும்.












Click it and Unblock the Notifications