For Daily Alerts
Just In
ஒரே ஒரு ஓட்டு பெற்ற சுயேச்சை வேட்பாளர்
சென்னை:
ஆரணி நகராட்சி வார்டு தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் ஒருவருக்கு ஒரு ஓட்டு மட்டுமே விழுந்தது.
ஆரணி 14-வது வார்டில் சுயேச்சையாகப் போட்டியிட்டவர் ஆரணி ஆறுமுகம். பாட்டில் சின்னத்தில் நன்றார்.
தேர்தலில் இவருடைய ஓட்டு மட்டுமே இவருக்கு கிடைத்துள்ளது. குடும்பத்தில் உள்ளவர்கள் கூட இவருக்குவாக்களிக்கவில்லை போலும்.
இவர் எந்தத் தேர்தல் வந்தாலும் அதில் போட்டியிடுவது வழக்கமாம். இது இவருக்கு பொழுதுபோக்கு என்பதால்,இவருக்கு வாக்களித்து ஓட்டை வீணடிக்க வேண்டாம் என்று அவரது குடும்பத்தினர் முடிவு செய்து விட்டார்கள்என்று தெரிகிறது.
admk nellai chennai stalin tamilnadu tmc mayor corporation panchayat civic polls local body election
Story first published: Monday, October 22, 2001, 5:30 [IST]