மீண்டும் புயல் சின்னம்: தமிழகத்தில் பலத்த மழை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையே கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதையடுத்துதமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது.
கடந்த இரு நாட்களாகவே தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இது மேலும் இரண்டு நாட்களுக்குநீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
கடந்த வாரம் தான் தமிழக கடற்கரை அருகே புயல் சின்னம் ஏற்பட்டு தமிழகத்தில் பலத்த மழை பெய்தது. பின்னர்இந்தப் புயல் ஆந்திராவில் கரையைக் கடந்து அங்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications