நான் பேசினால் பன்னீர் தாங்க மாட்டார்: கருணாநிதி
சென்னை:
உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடந்தது என்று முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.அவர் கூறியுள்ளவை அவர் உள்ளத்திலிருந்து வரும் கருத்துக்களல்ல. நான் பதிலளித்தால்அவர் தாங்கமாட்டார் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் நற்று (புதன்கிழமை) கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:
உள்ளாட்சி தேர்தலின் போது வன்முறை, கள்ள ஓட்டு, சதி, எல்லாம் நடந்தபின்பும்ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார். ஒரு கட்டத்தில் ஸ்டாலின் 2 ஆயிரம் வாக்குவித்தியாசத்தில் தோற்றுவிட்டார் என்று அறிவிக்க தயாராக இருந்தார்கள்.
ஆனால் நாங்கள் சட்ட ரீதியாக எடுத்த நடவடிக்கை காரணமாகவும், சட்டத்திற்கு புறம்பாகநடப்பவைகளை தட்டிக் கேட்கும் பொறுப்பிலிருந்தவர்கள் எச்சரித்ததாலும் ஸ்டாலின் 5ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.
தவறு செய்த அதிகாரிகள் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்காது.பதவி உயர்வுதான் தரும்.
நாங்கள் தேர்தல் முறைகேடுகள் குறித்து ஆளுனரிடம் புகார் கொடுத்துள்ளோம். நிலையைச்சொன்னோம். அவர் உண்மையை புரிந்து கொண்டார்.
தேர்தல் முறைகேடு குறித்து வழக்கு தொடர்வது குறித்தும், அறப்போராட்டம் நடத்துவதுகுறித்து மீண்டும் யோசித்து முடிவெடுப்போம்.
திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட பாமக எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை. முன்பு அண்ணா இருந்த போது மாநகராட்சி தேர்தலில் திமுகவும். சுதந்திராகட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
திமுக வெற்றி பெற்றது. ஆனால் சுதந்திரா கட்சிக்கு 1 இடம் கூட கிடைக்கவில்லை. இதுகுறித்து ராஜாஜி கூறுகையில்,குழம்பில் எவ்வாறு உப்பு கலந்திருக்கிறதோ அதேபால் திமுகவெற்றியில் சுதந்திராவின் ஓட்டுக்களும் கலந்துள்ளன என்று கூறினார். ராஜாஜி அப்போதுகூறியது இப்போதைய நிலைக்கும் பொருந்தும்.
உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடந்துள்ளாதாக முதல்வர் கூறியுள்ளார். நான் அவருக்குமதிப்பளிப்பவன் அவரது வார்த்தைகள் அவரது உள்ளத்திலிருந்து வருபவையல்லஎன்பதை நான் நன்கு அறிவேன். நான் பதில் கூறினால் அவர் தாங்கமாட்டார்.எனவேநான் அவருக்கு பதிலளிக்க விரும்பவில்லை.
விரைவில் திமுகவில் உட்கட்சி தேர்தல் நடந்த முடிவெடுத்துள்ளோம். கட்சியில் அமைப்பு,நிர்வாக, செயல் ரீதியாக மாற்றங்களைச் செய்ய நானும் பொதுச் செயலாளரும்ஆலோசனை செய்து வருகிறோம்.
விரைவில் உறுப்பினர் சேர்க்கையும், கட்சி அமைப்புக்-கு தேர்தலும் நடைபெறும் என்றார்.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல்












Click it and Unblock the Notifications