For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருச்சியில் 2 சகோதரர்கள கடத்தல்: பணம் கேட்டு மிரட்டல்

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

திருச்சியில் 14, 9 வயதான இரு சகோதரர்கள் கடத்தப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிக்க பணம் கேட்டு ஒருமர்மக் கும்பல் மிரட்டி வருகிறது.

திருச்சி வேர்அவுஸ் தெற்கு இரட்டைப் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மெல்வின். இவர்பாலக்கரையில் பீடாக்கடை நடத்தி வருகிறார்.

கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் மெல்வினின் மகன்கள் ஜான் செல்லத்துரை, லோகேஷ்ஆகிய 2 பேரும் சில நாட்களுக்கு முன் பள்ளியிலிருந்து வீடு திரும்பவில்லை.

எனவே மெல்வின் இதுகுறித்து கன்டோன்மென்ட் போலீசில் புகார் செய்தார். இதற்கிடையில் மெல்வின் வீட்டுக்குச்சில மர்ம மனிதர்கள் 2 முறை போன் செய்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

பணத்தை விரைந்து ரெடி பண்ணுங்கள், நாங்கள் மீண்டும் போன் செய்வோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.மெல்வின் இதுகுறித்தும் போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி போன் செய்த மர்ம கும்பலைத் தேடி வருகிறார்கள். இச் சம்பவம்அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X