For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க உளவாளிகளைக் கொல்ல ஒமர் உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்:

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆளும் பகுதியில் அமெரிக்க உளவாளிகள் யாரும் இருந்தால் அவர்களைக்கொன்றுவிடுமாறு முல்லா ஒமர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு காபூலில் நார்தர்ன் அலையன்ஸ் படையைச் சேர்ந்த 5 பேரை, தலிபான் ராணுவநடவடிக்கைகளை உளவு பார்த்தாக பொது இடத்தில் வைத்துத் தலிபான்கள் தூக்கிலிட்டுக் கொன்றனர்.

இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் தடுக்க தற்போது தலிபான்கள் ஆளும் பகுதியில் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.

மேலும், அமெரிக்காவிற்கு ஆதரவாக யாரும் மறைமுக வேலைகளில் இறங்கினாலோ, அல்லது அவர்களுக்குஉளவு பார்க்கும் வேலையில் ஈடுபட்டாலோ அவர்களைப் பிடித்து விசாரித்து தூக்கிலிட வேண்டும் என்று தலிபான்தலைவர் முல்லா ஒமர் தனது படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து நேற்று தலிபான் உள்துறை அமைச்சக அதிகாரி முல்லா அப்துல் ரசாக் கூறுகையில், நாங்கள் எங்கள்பகுதியில் பாதுகாப்பை அதிகரித்துள்ளோம். மேலும் அமெரிக்காவுக்கு ஆதரவாக யார் செயல்பட்டாலும்அவர்களைத் தூக்கிலிட்டுக் கொல்ல வேண்டு என்று முல்லா ஒமர் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் இதுவரை 100 பேரை கைது செய்து, அவர்கள் தலிபான்களின் போர் நடவடிக்கைகள் குறித்துஉளவு பார்த்தார்களா என்று விசாரித்து வருகிறோம் என்றார்.

காண்டஹார் நகரில் வசித்து வந்த மக்களில் பாதிக்குமேற்பட்டவர்கள் அமெரிக்க குண்டுவீச்சுத் தாக்குதலுக்குப்பயந்து அங்கிருந்து வெளியேறி விட்டனர்.

மேலும் தலிபான் வீரர்கள் வீடுவீடாகப் புகுந்த அங்கிருக்கும் மக்களை ஆயுதங்களுடன் அமெரிக்காவுக்கு எதிரானபோரில் கலந்துகொள்ள வரவேண்டும் என்று உத்தரவிட்டு வருகின்றனர்.

மேலும், அங்கு வரும் வாகனங்கள் அனைத்தையும் நிறுத்தி சோதனை செய்வதுடன் அவர்களிடம் விசாரணையும்நடத்துகிறார்கள்.

வீரர்கள் அனைவரும் ராக்கெட் லான்ச்சர் மற்றும் ஏ.கே. ரகத் துப்பாக்கிகளுடன் ரோந்துப் பணியில்ஈடுபட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X