வேலை நிறுத்தத்தில் குதிக்கும் பஞ்சாலை ஊழியர்கள்
சென்னை:
கோவை மாவட்ட பஞ்சாலைத் தொழிலாளர்கள் நவம்பர் 10ம் தேதிக்குள்தங்களுக்குரிய தீபாவளி போனஸ் தொகை குறித்து பஞ்சாலை நிர்வாகங்கள்அறிவிக்காவிட்டால் 12ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன.
கோவை மாவட்ட பஞ்சாலைத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டுக் குழுக் கூட்டம்கோவையில் வியாழக்கிழமை நடந்தது. கோவையில் ஒன்றரை லட்சத்திற்கும்மேற்பட்ட பஞ்சாலைத் தொழிலாளர்கள் உள்ளனர்.
இவர்களது ஊதியத்திற்கேற்ப 14 சதவீதம் முதல் 32 சதவீதம் வரை போனஸ் தொகைவழங்கப்பட வேண்டும்.
போனஸ் குறித்து இதுவரை பஞ்சாலை நிர்வாகங்கள் எந்த நடவடிக்கையும்எடுத்ததாகத் தெரியவில்லை. எனவே நவம்பர் 10ம் தேதிக்குள் போனஸ் குறித்துநிர்வாகங்கள் அறிவிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் 12ம் தேதி முதல் காலைவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்துவக்கப்படும். இதுதொடர்பாக நிர்வாகங்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது என்று அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.