ஜெயலலிதாவுடன் புதுவை புதிய முதல்வர் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாண்டிச்சேரி காங்கிரஸ் அரசுக்கு அதிமுகவும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும்தொடர்ந்து ஆதரவு தரும் என்று பாண்டிச்சேரி முதல்வராகப் பதவியேற்கவுள்ளரங்கசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை சென்னைக்கு வந்த ரங்கசாமி முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்ஆகியோரைச் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பாண்டிச்சேரியில் உள்ள காங்கிரஸ்அரசுக்கு தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸும், அதிமுகவும் ஆதரவு தர வேண்டும்என்று ஜெயலலிதாவையும், வாசனையும் கேட்டுக் கொண்டேன். அவர்களும்தருவார்கள் என்று நம்புகிறேன்.
கூட்டணி அரசில் எந்த மாற்றமும் இருக்காது. அமைச்சரவையில் அதிமுகவையும்,தமாகாவையும் சேர்க்க முயற்சிகள் நடந்து வருகின்றன என்றார் அவர்.












Click it and Unblock the Notifications