திருச்செந்தூர் அருகே வேன்-மினி லாரி மோதல்: 8 பேர் பலி, 22 பேர் காயம்
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே கந்தசாமிபுரம் என்ற இடத்தில் வேனும் மினி லாரியும் மோதிக் கொண்டதில் ஒன்றரை வயதுகுழந்தை உள்பட 8 பேர் அந்த இடத்திலேயே இறந்தனர். 22 பேர் படுகாயமடைந்தனர்.
இன்று (சனிக்கழமை) பகலில் இந்த விபத்து நடந்தது. வேனில் சென்றவர்கள் திருச்செந்தூரில் நடந்த தசராவிழாவில் கலந்து கொண்டு விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.
மினி லாரி ஆரல்வாய்மொழிக்கு சென்று கொண்டிருந்தது.
கந்தசாமிபுரம் அருகே வந்தபோது வேன் மீது மினி லாரி வேகமாக வந்து மோதியது.
இதில் வேனில் இருந்த ஒன்றரை வயது குழந்தை, 2 பெண்கள் உள்பட 8 பேர் இறந்தனர். 22 பேர் காயமடைந்தனர்.
சம்பவ இடத்தில் உடல்கள் ரத்த வெள்ளத்தில் சிதறிக் கிடந்தது அனைவரின் கண்களிலும் நீரைவரவழைத்துவிட்டது.
காயமடைந்தவர்களில் 10 பேர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மற்றவர்கள்திருச்செந்தூர் அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.