முதல்வராகப் பதவியேற்றார் ரங்கசாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாண்டிச்சேரி காங்கிரஸ் முதல்வராக ரங்கசாமி சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
ரங்கசாமி மட்டுமே சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். அமைச்சர்கள் தேர்வு இன்னும் முடியவில்லை என்பதால் ஞாயிற்றுக்கிழமைஅல்லது திங்கள்கிழமை புதிய அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று தெரிகிறது.
ரங்கசாமி 1 மாதத்திற்குள் தனது பெரும்பான்மை பலத்தை சட்டசபையில் நிரூபிக்க வேண்டும் என்று ஆளுனர் உத்தரவிட்டுள்ளார்.
பதவியேற்றவுடன் தாழ்த்தப்பட்டவர்கள், ஏழை எளிய மக்களுக்கு ரூ. 1.53 கோடி மதிப்புக்கு இலவச வேஷ்டி சேலை வழங்கும் திட்டத்தில்கையெழுத்திட்டார்.
செய்தியாளர்களிடம் பேசுகையில், இப்போதைக்கு அதிமுக, த.மா.கவின் ஆதரவு தனது ஆட்சிக்குத் தேவையில்லை எனவும், ஆனால், இருகட்சிகளும் காங்கிரஸ் கூட்டணியில் தான் இருப்பதாகவும் கூறினார்.












Click it and Unblock the Notifications