For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

5 எதிர்ப் படைத் தளபதிகளை தூக்கிலிட்டது தலிபான்

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்:

நார்த்தர்ன் அலையன்ஸ் படையைச் சேர்ந்த 5 கமாண்டர்களை தலிபான்கள் இன்று (சனிக்கிழமை) தூக்கிலிட்டனர்.

ஆப்கானிஸ்தானின் சமாகான் மண்டலத்தில் தார்-ஏ-செளப் பகுதியைப் பிடிக்கச் சென்ற நார்த்தர்ன் அலையன்ஸ்படையினரை தலிபான்கள் கடுமையாகத் தாக்கினர். அப்போது 5 கமாண்டர்களும் 15 வீரர்களும் தலிபான்களிடம்பிடிபட்டனர்.

பிடிபட்ட 5 கமாண்டர்களையும் தலிபான்கள் தூக்கிலிட்டனர்.

நேற்று தான் இந்தப் படையின் முக்கியத் தவைர்களில் ஒருவரான அப்துல் ஹக்கை தலிபான்கள் சுட்டுக் கொன்றனர்.அவரது இறப்பு நார்த்தர்ன் அலையன்சுக்கு பெரும் இழப்பாகும்.

இந் நிலையில் மேலும் 5 பேரை நார்த்தர்ன் அலையன்ஸ் இழந்துள்ளது.

கொல்லப்பட்ட அப்துல் ஹக்கின் உடல் நாளை பெஷாவரில் தகனம் செய்யப்படும் என்று தெரிகிறது. அவரதுஉடலை உறவினர்களிடம் வழங்க தலிபான்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இப்போது அவரது உடல் காபூலில்வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலை உறவினர்கள் பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் தகனம் செய்யத் திட்டமிட்டுள்ளனர். அவருடன்கொல்லப்பட்ட மேலும் 2 பேரின் உடல்களையும் ஒப்படைக்க தலிபான் முன்வந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X