5 எதிர்ப் படைத் தளபதிகளை தூக்கிலிட்டது தலிபான்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
நார்த்தர்ன் அலையன்ஸ் படையைச் சேர்ந்த 5 கமாண்டர்களை தலிபான்கள் இன்று (சனிக்கிழமை) தூக்கிலிட்டனர்.
பிடிபட்ட 5 கமாண்டர்களையும் தலிபான்கள் தூக்கிலிட்டனர்.
நேற்று தான் இந்தப் படையின் முக்கியத் தவைர்களில் ஒருவரான அப்துல் ஹக்கை தலிபான்கள் சுட்டுக் கொன்றனர்.அவரது இறப்பு நார்த்தர்ன் அலையன்சுக்கு பெரும் இழப்பாகும்.
இந் நிலையில் மேலும் 5 பேரை நார்த்தர்ன் அலையன்ஸ் இழந்துள்ளது.
கொல்லப்பட்ட அப்துல் ஹக்கின் உடல் நாளை பெஷாவரில் தகனம் செய்யப்படும் என்று தெரிகிறது. அவரதுஉடலை உறவினர்களிடம் வழங்க தலிபான்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இப்போது அவரது உடல் காபூலில்வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலை உறவினர்கள் பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் தகனம் செய்யத் திட்டமிட்டுள்ளனர். அவருடன்கொல்லப்பட்ட மேலும் 2 பேரின் உடல்களையும் ஒப்படைக்க தலிபான் முன்வந்துள்ளது.












Click it and Unblock the Notifications