மதுரை துணை மேயர் பதவி- சுயேச்சைகளுக்கு அதிமுக, திமுக வலைவீச்சு
சென்னை:
அழகிரி ஆதரவு சுயேச்சை கவுன்சிலர்கள் இணைந்ததையடுத்து பலமடைந்துள்ள திமுக, மதுரை மாநகராட்சி துணைமேயர் பதவியைக்கைப்பற்றும் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது. பிற சுயேச்சை கவுன்சிலர்களையும் வலைக்க திமுக வலைவிரித்துள்ளது.
இருப்பினும் அதிமுகவும் இந்த சுயேச்சைகளை எப்படியாவது தனக்கு ஆதரவாகத் திருப்ப களத்தில் இறங்கியுள்ளதால் பெரும் இழுபறி நிலைநீடிக்கிறது.
மதுரை மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அழகிரியின் ஆதரவாளர்களான 3 சுயேச்சை கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தனர்.இதையடுத்து மதுரை மாநகராட்சியில் திமுகவின் பலம் 30 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து துணைமேயர் தேர்தலில் இன்னும் சிலசுயேச்சைகளைப் பிடிட்ததால் வெற்றிபெற்று விடலாம் என்ற முடிவுக்கு திமுக வந்துள்ளது. துணை மேயர் பதவியைப் பிடிக்க 37கவுன்சிலர்களின் ஆதரவு தேவை.
மதுரை மாநகராட்சித் தேர்தலில் மொத்தம் உள்ள 72 வார்டுகளில் திமுக 27 இடங்களிலும் அதன் தோழமைக் கட்சியான பாரதீய ஜனதாக்கட்சி 2 வார்டுகளிலும் ஜெயித்தன.
அதிமுக கூட்டணியில் அதிமுக 22 இடங்களிலும், தமாகா 5 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 1 இடத்திலும் ஜெயித்துள்ளன.
இதுதவிர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. இந்த இருகட்சிகளும் மாநில அளவில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தாலும் மாநகராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டன.
இப்போதைய நிலையில் திமுக கூட்டணியிடம் மொத்தம் 29 கவுன்சிலர்கள் உள்ளனர்.
அதிமுக கூட்டணி வசம் 28 பேர் உள்ளனர்.
இதனால் சுயேச்சைகளின் ஆதரவைப் பெற்றவர்கள் தான் துணை மேயராக முடியும்.
இதையடுத்து சுயேச்சைகளுக்கு வலைவிரிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. அதிமுகவும், திமுகவும் போட்டி போட்டுக் கொண்டு பலலட்சங்களை அள்ளி வழங்க தயாராக இருப்பதால் சுயேச்சைகளின் மவுசு கூடியுள்ளது.
யார் அதிகம் தருகிறார்களோ அவர்களுக்குத் தான் சுயேச்சைகள் ஆதரவளிப்பார்கள் என்ற நிலையில் மதுரையில் கரைவேட்டிகள்பெட்டிகளுடன் அலைந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
யாருக்கு வெறி என்பது 31ம் தேதி தெரியும்.