மதுரையில் ரூ.2 கோடி ஹெராயினுடன் தஞ்சை வாலிபர் கைது
மதுரை:
மதுரையில் ரூ.2 கோடி மதிப்புள்ள ஹெராயினைக் கடத்த முயன்றவரைப் போலீசார் கையும் களவுமாகப் பிடித்துக்கைது செய்தனர்.
இதுகுறித்த விவரம் வருமாறு,
தஞ்சாவூரில் உள்ள தில்லைநகர் பகுதியில் வசித்து வருபவர் கல்யாணசுந்தரம்.
இவர் ஹெராயின், கஞ்சா போன்ற போதைப் பொருட்களைக் கடத்திவருவதாகப் போதைப் பொருள் தடுப்புப்பிரிவுப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து இவரது நடவடிக்கைகளை போலீசார் தீவிரமாகக்கண்காணிக்கத் தொடங்கினர்.
இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை மதுரை வந்த கல்யாணசுந்தரம் 2 கிலோ மதிப்புள்ள ஹெராயின்வைத்திருப்பதை போலீசார் அறிந்தனர். சர்வதேச மார்க்கெட்டில் இதன் மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.
இதையடுத்து கல்யாணசுந்தரத்தைப் பிடித்து அவரிடம் இருந்த 2 கிலோ எடையுள்ள ஹெராயினைப் பறிமுதல்செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications