இலங்கை தேர்தல்: மனுதாக்கல் முடிந்தது
கொழும்பு:
இலங்கையில் வரும் டிசம்பர் மாதம் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதை ஒட்டி அங்குள்ள அனைத்துஅரசியல் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளன.
கடந்த சில வாரஙங்களுக்கு முன் நம்பிக்கை இல்லாத் தீர்மாணம் நிறைவேற்றப்படுவதாக இருந்தபோது, பலஎம்.பிக்கள் ஆளும் கட்சியிலிருந்து எதிர் கட்சிகளுக்குத் தாவினார்கள். இதனால் அனைத்து கட்சிகளும் புதிதாகவந்தவர்களுக்குச் சீட் கொடுப்பதா, அல்லது பழைய ஆட்களுக்குச் சீட் கொடுப்பதா என்ற குழப்பத்தில் இருந்தன.
இந்தக் குழப்பம் தற்போது ஒருவழியாக முடிவுக்கு வந்து பிரச்சாரம் தொடங்கப்பட இருக்கிறது.
இந்த முறையும் தமிழர்களுக்கும், சிங்களர்களுக்கும் இடையே நடைபெற்று வரும் வம்சாவழிப் போர்தான் முக்கியபிரச்சாரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் பெரிய அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.இதுகுறித்து தேர்தல் ஆணையாளர் தயானந்த திசநாயகே கூறியதாவது,
எல்லா இடங்களிலும் அமைதிான முறையிலும், சுதந்திரமாகவும் தேர்தல் நடத்தத் தேவையான எல்லாஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். எந்த இடத்திலாவது வன்முறை ஏற்பட்டு தேர்தல் பாதிக்கப்படுமானால்,எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி வன்முறைகளை அடக்கி தேர்தலைதிட்டமிட்டபடி நடத்தப் பாடுபடுவேன் என்றார்.
கடந்த 2000ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலின் போது ஏற்பட்ட வன்முறையில் 70 பேர்கொல்லப்பட்டனர். இந்த முறை இதுவரை 60 வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளதாக ஒரு ஆய்வாளர்கூறினார்.
சந்திரிகா தலைமையிலான மக்கள் கூட்டணிக்கும், எதிர்கட்சியாக இருந்து சில தமிழர், முஸ்லீம் கட்சிகளின்ஆதரவைப் பெற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான யுனைடெட் நேஷனல் கட்சிக்கும் இடையே கடும்போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.