தேவர் குருபூஜையில் பன்னீர் பங்கேற்கிறார்
சென்னை:
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை நிகழ்ச்சியில் முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.
தேவரின் குருபூஜை நிகழ்ச்சி அவர் பிறந்த கிராமமான பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது சமாதியில் அரசு சார்பில் வரும் 30ம் தேதிகொண்டாடப்படவுள்ளது. குருபூஜை நிகழ்ச்சியில் முதல்வர் பன்னீர் செல்வம் கலந்துகொள்கிறார்.
30ம் தேதி காலை 7.30 மணிக்கு மதுரையில் உள்ள தேவர் சிலைக்கு பன்னீர் செல்வம் மாலை அணிவிக்கிறார். சபாநாயகர் காளிமுத்துமற்றும் அமைச்சர்களும் இதில் கலந்து கொள்கிறார்கள்.
பின்னர் மதுரையில் இருந்து காரில் பசும்பொன் கிராமத்திற்கு பன்னீர், சபாநாயகர், அமைச்சர்கள் செல்கிறார்கள். அங்கு காலை 10மணிக்கு தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார் பன்னீர் செல்வம். பின்னர் தேவர் புகைப்படக்கண்காட்சியையும் பன்னீர் செல்வம் திறந்து வைக்கிறார்.
மாலை 4 மணிக்கு அரசு சார்பில் நடக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நைனார் நாகேந்திரன், அன்வர்ராஜா, துரைராஜ், திருநாவுக்கரசுஉள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
சென்னை நந்தனம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சாலையில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு 30ம் தேதி அமைச்சர்கள்பொன்னையன், ஜெயக்குமார், வளர்மதி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்கள்.
இவ்வாறு அதிமுக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications