For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முஸ்லீம் மதத்திற்கு மாற முயன்ற 60 தாழ்த்தப்பட்ட குடும்பங்கள்

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அருகேயுள்ள ஊரில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 60 குடும்பத்தினர் தங்களுக்கு அடிப்படைஉரிமைகள் மறுக்கப்படுவதை எதிர்த்து முஸ்லீம் மதத்திற்கு மாற எடுத்த முடிவை அதிகாரிகள் கொடுத்த உறுதிமொழிக்கு பின் கைவிட்டனர்.

காஞ்சிபுரம் அருகில் உள்ளது கூத்தரம்பாக்கம். இங்கு வசித்து வரும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள்முஸ்லீம் மதத்திற்கு மாற முடிவெடுத்தனர்.

இது குறித்த தகவல் கிடைத்ததும் ஆர்.டி.ஓ. சங்கரன், திமுக கவுன்சிலர் அசோக்குமார் மற்றும் பல உயர் அதிகாரிகள்கூத்தரம்பாக்கம் சென்று மதம் மாற முடிவெடுத்திருந்த தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களிடம் பேச்சுவார்த்தைநடத்தினர்.

பேச்சுவார்த்தையின் போது அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதியையடுத்து தங்கள் மத மாற்ற முடிவை தாழத்தப்பட்டசமுதாய மக்கள் கைவிட்டனர்.

இது குறித்து ஆர்.டி.ஓ. சங்கரன் கூறியதாவது:

4 வருடங்களுக்கு முன்பே ஏலத் தொகையை செலுத்திய பின்பும் தங்களுக்கு உள்ளூர் ஏரியில் மீன் பிடிக்க அனுமதிமறுக்கப்படுகிறது என்றும், உள்ளூர் கோவில் விழாக்களில் பங்கு பெற தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும்,குடிநீருக்கான ஒரே ஆதாரத்திலும் குடிநீர் எடுக்க எங்களுக்கு அனுமதி இல்லை.

அடிப்படை உரிமைகளே எங்களுக்கு மறுக்கப்படுவதால் நாங்கள் மதம் மாற முடிவெடுத்தோம். பல சிறுபான்மைதலைவர்களும் இது குறித்து எங்களை அணுகி வருகிறார்கள் என்று தாழ்த்தப்பட்ட மக்கள் கூறினர்.

இந்த பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக நாங்கள் கூறிய உறுதிமொழியையடுத்து அவர்கள் மதம் மாறும் முடிவைமாற்றிக் கொண்டனர் என்று சங்கரன் கூறினார்.

இந்தப் பிரச்சனை தொடர்பாக கடந்த 1996ம் ஆண்டே மாவட்ட நிர்வாகம் உறுதி மொழி அளித்தது. தற்போதுஅதிகாரிகள் மீண்டும் உறுதி மொழி கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X